செய்திகள்

லாரிகள் ஸ்டிரைக் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் - பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தலைவர் வேண்டுகோள்

Published On 2018-07-27 07:30 GMT   |   Update On 2018-07-27 07:30 GMT
லாரிகள் ஸ்டிரைக் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். #LorryStrike #vegetables

சிவகாசி:

சிறு பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தலைவர் விநாயகமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பட்டாசு தொழில் வெவ்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்தமுறை பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. வரியாலும், இந்த முறை லாரி ஸ்டிரைக்காலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ. 50 கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கமடைந்து ரூ. 300 கோடிக்கும் அதிகமான பட்டாசுகள் ஆலைகளில் தேக்கமடைந்துள்ளன.

இன்னும் 3 மாதங்களில் தீபாவளி பண்டிகை வர இருப்பதால் இப்போதே பட்டாசுகளை ஏற்றுமதி செய்தால் தான் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு போனஸ், முன்பணம் போன்றவை வழங்க முடியும்.

இந்த நிலை நீடித்தால் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டு பட்டாசு உற்பத்தி செய்யும் நிலைக்கு தடை ஏற்படும்.

விருதுநகர் மாவட்டத்தில் இந்த தொழிலை நம்பி சுமார் 8 லட்சம் தொழிலாளர்களும் சுமார் ஆயிரம் பட்டாசு விற்பனை கடைகளும் உள்ளன.

எனவே மாநில அரசு மற்றும் மத்திய அரசுகள் இந்த பிரச்சினையில் நேரடியாக தலையிட்டு லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

மேற்கண்டவாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. #LorryStrike #vegetables

Tags:    

Similar News