செய்திகள்

தண்டவாளத்தை சுத்தப்படுத்தும் பணி: ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

Published On 2018-07-23 21:46 GMT   |   Update On 2018-07-23 21:46 GMT
விழுப்புரம் பணிமனையில் தண்டவாளத்தை சுத்தப்படுத்தும் பணி நடைபெறுவதால் இன்று (செவ்வாய்க்கிழமை), நாளை மற்றும் நாளை மறுநாள் கீழ்க்கண்ட ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #SouthernRailway
சென்னை:

தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

விழுப்புரம் பணிமனையில் தண்டவாளத்தை சுத்தப்படுத்தும் பணி நடைபெறுவதால் இன்று (செவ்வாய்க்கிழமை), நாளை (புதன்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கீழ்க்கண்ட ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* சென்னை எழும்பூர்-புதுச்சேரி-எழும்பூர் பயணிகள் ரெயில் (வண்டி எண்:56037/56038), திண்டிவனம்-புதுச்சேரி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

* திருப்பதி-புதுச்சேரி-திருப்பதி பயணிகள் ரெயில் (56041/56042), திண்டிவனம்-புதுச்சேரி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

* எழும்பூர்-மதுரை வைகை எக்ஸ்பிரஸ் (12635), மதியம் 1.40 மணிக்கு புறப்படும் ரெயில், 2 மணி நேரம் தாமதமாக 3.40 மணிக்கு இன்று எழும்பூரில் இருந்து புறப்படும்.

* எழும்பூர்-காரைக்குடி பல்லவன் எக்ஸ்பிரஸ் (12605), மதியம் 3.45 மணிக்கு புறப்படும் ரெயில், 30 நிமிடம் தாமதமாக 4.15 மணிக்கு இன்று எழும்பூரில் இருந்து புறப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. #Tamilnews 
Tags:    

Similar News