செய்திகள்

கோவில்பட்டியில் தீக்குளித்து பெண் தற்கொலை

Published On 2018-07-23 19:24 IST   |   Update On 2018-07-23 19:24:00 IST
மனநிலை பாதிக்கப்பட பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவில்பட்டி:

கோவில்பட்டி வடக்கு திட்டங்குளத்தை சேர்ந்தவர் ராமர். இவரது மனைவி பாண்டியம்மாள்(வயது 40). இவர் சமீப காலமாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்ணென்னையை ஊற்றி தீக்குளித்தார். இதில் உடல் கருகி உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு பாண்டியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். 

இது குறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News