செய்திகள்

செட்டிக்குளம் கிராமத்தில் அம்மா திட்ட சிறப்பு முகாம்

Published On 2018-07-22 13:30 GMT   |   Update On 2018-07-22 13:30 GMT
ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளம் கிராமத்தில் வருவாய் துறை சார்பில் அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைப்பெற்றது.
பாடாலூர்:

ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளம் கிராமத்தில் வருவாய் துறை சார்பில் அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைப்பெற்றது. முகாமிற்கு ஆலத்தூர் தாலுகா சமூக நல பாதுகாப்பு திட்ட  தாசில்தார் கிருஷ்ணராஜ் தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்று தேவையான சான்றிதழ் வழங்க நடவடிக்கைகள் மேற்கொண்டார். 

முகாமில் பொதுமக்கள் பட்டா மாறுதல் , வருமானம், இருப்பிடம், சாதி சான்றிதழ், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள்கேட்டு மனுக்கள் அளித்தனர். அதில் தகுதியான மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பட்டா மற்றும் முதியோர் உதவி தொகை ஆணை வழங்கப்பட்டது.

முகாமில் வருவாய் ஆய்வாளர் அலுவலர் பழனியப்பன், கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News