செய்திகள்

சிவகங்கை அருகே கிராம சாலையை சீரமைத்து பஸ் வசதி செய்து தர வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

Published On 2018-07-21 07:22 GMT   |   Update On 2018-07-21 07:22 GMT
சிவகங்கை அருகே கிராம சாலையை சீரமைத்து பஸ் வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #Ruralroad

சிவகங்கை:

சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் மேலப்பூங்குடி ஊராட்சிக்குட்பட்டது, வலையராதினிப்பட்டி. இந்த கிராமத்தில் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இந்த கிராமத்தில் அடிப்படை வசதிகள் என்பது இன்றளவும் நிவர்த்தி செய்யப்படாத நிலையில் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து கீழப்பூங்குடி செல்லும் சாலை சேத மடைந்து காணப்படுகிறது.

சாலை வசதி ஓரளவு இருந்தும், இந்த கிராமத்திற்கு போக்குவரத்து வசதி இல்லை. இதனால் கிராம மக்கள் அன்றாட பணிகளுக்கு வெளியூர் சென்று வர வேண்டும் என்றால் 4 கி.மீ. தொலைவில் உள்ள திருமலை கிராமத்திற்குச் சென்று, பின்பு அங்கிருந்து பஸ்சில் வெளியூர் செல்ல வேண்டும்.

இதுதவிர வலைய ராதினிப்பட்டியில் தொடக்கப்பள்ளி மட்டும் உள்ளது. இங்குள்ள மாணவ-மாணவிகள் மேல் படிப்பிற்கு 4 கி.மீ. தொலைவில் கீழப்பூங்குடி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு செல்ல வேண்டும்.

வலையராதினிப் பட்டிக்கு போக்குவரத்து வசதி இல்லாததால், அந்த கிராமத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் தினசரி 4 கி.மீ. நடந்து சென்று படித்து வருகின்றனர்.

இதுகுறித்து வலைய ராதினிப்பட்டியை சேர்ந்த அழகர் கூறுகையில், சிவகங்கையில் இருந்து கீழப்பூங்குடி வழியாக எங்கள் கிராமத்திற்கு பஸ் வசதி கேட்டு பலமுறை அதிகாரிகளிடம் முறையிட் டும் எந்தவித நடவடிக் கையும் எடுக்கவில்லை.

சில மாதங்களுக்கு முன்பு மாணவ-மாணவிகளை அழைத்துக்கொண்டு சிவகங்கை கலெக்டரிடம் மனு கொடுத்தோம்.

இதையடுத்து அரசு அலுவலர்கள் கிராமத் திற்கு வந்து இங்குள்ள போக்குவரத்து வழித் தடத்தை பார்வையிட்டு சென்றனர். அதன் பின்னர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே வலையராதினிப்பட்டி கிராமத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்று வதுடன், பஸ் வசதியும் ஏற்படுத்தி தர வேண்டும் என்றார். #Ruralroad

Tags:    

Similar News