செய்திகள்
11 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: தஞ்சையில் மாதர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னையில் 11 வயது மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பாக தஞ்சை ரெயிலடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர்:
சென்னையில் 11 வயது மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பாக தஞ்சை ரெயிலடியில் ஆர்ப்பாட்டம் இன்று காலை நடைபெற்றது.
இதற்கு மாவட்ட செயலாளர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட தலைவர் சேவையா, இளைஞர் பெருமன்றம் மாவட்ட செயலாளர் செல்வகுமார், சி.பி.ஐ மாநகர செயலாளர் கிருஷ்ண மூர்த்தி உள்பட 25 பேர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது ‘‘பெண்களின் மீதான பாலியல் கொடுமைகளுக்கு அவசர சட்டம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்காமல் வழக்கை விரைவாக நடத்தி தண்டனை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.