செய்திகள்

புதுச்சேரி முதல்வர், சபாநாயகர் வீட்டில் பா.ஜ.க.வினர் நாளை முற்றுகை

Published On 2018-07-18 10:01 GMT   |   Update On 2018-07-18 10:01 GMT
நியமன எம்.எல்.ஏ.க்களை அனுமதிக்க மறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை பா.ஜ.க.வினர் சட்டசபை, முதல்-அமைச்சர், சபாநாயகர் வீடுகள் ஆகியவற்றில் முற்றுகையிட திட்டமிட்டுள்ளனர்.
புதுச்சேரி:

பா.ஜ.க. நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டசபைக்குள் அனுமதிக்க தொடர்ந்து மறுத்து வருகிறார்கள். வருகிற 19-ந் தேதி இது தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு ஏதேனும் உத்தரவு பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் முன்கூட்டியே சட்டசபை கூட்டத்தை முடித்து வைக்க உள்ளனர். 19-ந்தேதி அன்று சபை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட இருக்கிறது.

எம்.எல்.ஏ.க்களை அனுமதிக்க மறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை பா.ஜ.க.வினர் சட்டசபை, முதல்-அமைச்சர், சபாநாயகர் வீடுகள் ஆகியவற்றில் முற்றுகையிட திட்டமிட்டுள்ளனர்.

இந்த போராட்டம் குறித்து பா.ஜ.க. சார்பில அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. போராட்ட திட்டத்தை ரகசியமாக வைத்துள்ளனர்.

எந்த நேரத்தில் போராட்டம் நடக்கும் என்ற விவரங்களையும் பா.ஜ.க.வினர் கூறவில்லை.
Tags:    

Similar News