செய்திகள்

ராஜ்பவன் பணியாளர்களுக்கு மலிவுவிலை உணவகம் - கவர்னர் திறந்து வைத்தார்

Published On 2018-07-17 14:49 GMT   |   Update On 2018-07-17 14:49 GMT
சென்னை ராஜ்பவன் பணியாளர்களுக்காக காலை முதல் இரவு வரை இயங்கும் முழுநேர மலிவுவிலை உனவகத்தை கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று திறந்து வைத்தார். #RajBhavan #BanwarilalProhit
சென்னை:

தமிழக கவர்னர் மாளிகையில் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு பயன்படும் வகையில் காலை 8.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை இயங்கும் மலிவு விலை உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்தை கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று திறந்து வைத்தார்.

மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமாக தயாரிக்கப்படும் உணவு வகைகள் லாப நோக்கம் இல்லாமல், குறைந்த விலையில் ஊழியர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News