செய்திகள்
மதுரையில் லாரி டயரில் சிக்கி கல்லூரி மாணவர் பலி
மதுரையில் இன்று காலை தங்கையை பள்ளியில் விட்டு திரும்பியபோது லாரி டயரில் சிக்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
மதுரை:
மதுரை புதுஜெயில்ரோடு மில்காலனியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் ரூபேஷ் (வயது 19). இவர் மதுரை கல்லூரியில் படித்து வந்தார்.
தினமும் காலை தனது தங்கையை மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு அழைத்து செல்வது வழக்கம்.
இன்று காலையும் ரூபேஷ் வழக்கம்போல் தனது தங்கையை பள்ளிக்கு அழைத்து சென்றார். கருடர் பாலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் தங்கையை இறக்கிவிட்டு விட்டு ரூபேஷ் வீட்டுக்கு புறப்பட்டார்.
பள்ளியில் இருந்து சிறிது தூரம் கூட செல்லாத நிலையில் அந்த வழியாக வந்த லாரி மோட்டார் சைக் கிள் மீது உரசியது. இதில் நிலைதடுமாறி ரூபேஷ் கீழே விழுந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக லாரியின் பின் டயர் ரூபேஷ் மீது ஏறியது. இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
விபத்து குறித்து கரிமேடு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பள்ளி அருகே அண்ணன் விபத்தில் சிக்கி பலியானதை பார்த்து அவரது தங்கை கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது. #Tamilnews
மதுரை புதுஜெயில்ரோடு மில்காலனியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் ரூபேஷ் (வயது 19). இவர் மதுரை கல்லூரியில் படித்து வந்தார்.
தினமும் காலை தனது தங்கையை மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு அழைத்து செல்வது வழக்கம்.
இன்று காலையும் ரூபேஷ் வழக்கம்போல் தனது தங்கையை பள்ளிக்கு அழைத்து சென்றார். கருடர் பாலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் தங்கையை இறக்கிவிட்டு விட்டு ரூபேஷ் வீட்டுக்கு புறப்பட்டார்.
பள்ளியில் இருந்து சிறிது தூரம் கூட செல்லாத நிலையில் அந்த வழியாக வந்த லாரி மோட்டார் சைக் கிள் மீது உரசியது. இதில் நிலைதடுமாறி ரூபேஷ் கீழே விழுந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக லாரியின் பின் டயர் ரூபேஷ் மீது ஏறியது. இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
விபத்து குறித்து கரிமேடு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பள்ளி அருகே அண்ணன் விபத்தில் சிக்கி பலியானதை பார்த்து அவரது தங்கை கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது. #Tamilnews