செய்திகள்

போடி ஏலத்தில் 1,14,000 கிலோ ஏலக்காய் விற்பனை

Published On 2018-07-14 10:17 GMT   |   Update On 2018-07-14 10:17 GMT
போடியில் நடைபெற்ற ஏலத்தில் 1,14,000 கிலோ ஏலக்காய் விற்பனை ஆனது.
போடி:

கேரள மாநிலம் குமுளி, வண்டன்மேடு மற்றும் கம்பம் மெட்டு, போடி மெட்டு ஆகிய பகுதிகளில் ஏலக்காய் சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்த ஏலக்காய்களை போடி குரங்கனி சாலையில் உள்ள நறுமணபொருள் வாரியத்திற்கு கொண்டு வரப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்த ஏலக்காய்களுக்கு வெளிநாட்டில் அதிக கிராக்கி இருப்பதால் ஏராளமான வியாபாரிகள் போட்டிபோட்டுக்கொண்டு கொள்முதல் செய்கின்றனர். போடி நறுமணபொருள் வாரியத்தில் நடைபெற்ற ஏலத்தில் போடி, கம்பம், தேவாரம், குமுளி, வண்டன் மேடு, டெல்லி, மும்பை, கொல்கத்தா பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதில் சுமார் 1,14,000 கிலோ ஏலக்காய் விற்பனையானது. ஒரு கிலோ அதிகபட்ச விலையாக ரூ.1296 மற்றும் குறைந்தபட்ச விலையாக ரூ.929 நிர்ணயம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டு ஏலக்காய்களை கொள்முதல் செய்தனர்.

Tags:    

Similar News