செய்திகள்

பவானி அருகே திருமணமான 1½ மாதத்தில் இளம்பெண் மாயம்- கணவர் போலீசில் புகார்

Published On 2018-07-12 17:19 IST   |   Update On 2018-07-12 17:19:00 IST
பவானி அருகே திருமணமான 1½ மாதத்தில் இளம்பெண் மாயமானது குறித்து கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
பவானி:

பவானி, பழனிபுரம் முதல் வீதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கும் பூமிகா (19) என்பவருக்கும் கடந்த மே மாதம் 25-ந் தேதி திருமணம் நடந்தது.

இரு வீட்டார் சம்மதத்துடன் பெரியோர்கள் முன்னிலையில் இந்த திருமணம் நடந்தபோதும் பூமிகாவுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என தெரிகிறது.

இதனால் கடந்த 5-ந் தேதி பூமிகா வீட்டை விட்டு சென்றார். அவர் சென்னைக்கு சென்றது தெரியவந்தது. அவரை சென்னை கோயம்பேடு போலீசார் மீட்டனர்.

அவர் கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் இருக்கும் தகவல் அறிந்த பூமிகாவின் தாயார் மற்றும் உறவினர்கள் அங்கு சென்றனர். சென்னையில் இருந்து பூமிகாவை கடந்த 7-ந் தேதி பவானி, பழனிபுரத்துக்கு அழைத்து வந்தனர்.

அவரை பிரகாஷ் தனது வீட்டுக்கு அழைத்து சென்றார். அன்று இரவு பிரகாசும், பூமிகாவும் பேசிக் கொண்டு இருந்தனர். பின்னர் பிரகாஷ் தூங்க சென்றார். மறுநாள் காலை 6 மணி அளவில் எழுந்து பார்த்தபோது பூமிகாவை காணவில்லை. அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

இதையடுத்து அவர் மாயமானது தொடர்பாக பவானி போலீஸ் நிலையத்தில் பிரகாஷ் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் இளங்கோ விசாரணை நடத்தி வருகிறார்.

அந்தியூர் அருகே உள்ள ஜரத்தல் கிழக்குத் தெருவை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி செல்வி (வயது 38). இவர் கடந்த 8-ந் தேதி தனது உறவினரிடம் பணம் வாங்கி வருவதாக கூறிவிட்டு சென்றார்.

ஆனால் அதன்பின்னர் செல்வி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும், உறவினர்கள், அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தும் செல்வி பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

எனவே அவர் மாயமானது குறித்து வெள்ளித் திருப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News