செய்திகள்

எல்பிஜி, பெட்ரோல் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக்கிற்கு சென்னை ஐகோர்ட் தடை

Published On 2018-07-10 15:24 IST   |   Update On 2018-07-10 15:24:00 IST
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த இரண்டு நாட்களாக எல்பிஜி, பெட்ரோல் டேங்கர் லாரிகள் நடத்தி வந்த ஸ்டிரைக்கிற்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
சென்னை:

டெண்டர் ஒதுக்குவதில் பழைய நடைமுறையை பின்பற்ற வேண்டும் ஆகிய பல கோரிக்கைகளை வலியுறுத்தி டேங்கர் லாரி சங்க உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்திருந்தனர். இதன்படி, கடந்த இரண்டு நாட்களாக எல்பிஜி, பெட்ரோல் டேங்கர் லாரிகள் இயங்கவில்லை.

ஸ்டிரைக்கை எதிர்த்து ஹிந்துஸ்தான் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், வேலைநிறுத்தத்தால் பெட்ரோல், டீசல் கொண்டு செல்வது பாதிக்கப்பட்டுள்ளதால், ஸ்டிரைக்கிற்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News