செய்திகள்
வடசென்னை அனல் மின்நிலையத்தில் மின்உற்பத்தி பாதிப்பு
வடசென்னை அனல் மின்நிலையத்தில் முதல் நிலை முதல் அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
பொன்னேரி:
மீஞ்சூரை அடுத்த அத்திபட்டு புதுநகரில் வட சென்னை அனல் மின்நிலையம் உள்ளது. இங்கு இரண்டு நிலைகளில் மொத்தம் 1830 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படுகிறது. முதல் நிலையில் மூன்று அலகுகளிலும் தலா 210 முதல் 630 மெகாவாட்டும், இரண்டாம் நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 வீதம் 1200 மெகாவாட்டும் மின்உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் முதல் நிலை முதல் அலகில் கொதிகலன் குழாயில் திடீரென பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த அலகில் உற்பத்தி செய்யப்பட்டு வந்த 210 மெகாவாட் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. மின் உற்பத்தி பாதிக்கப்பட்ட பகுதியை மின் ஊழியர்கள் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மீஞ்சூரை அடுத்த அத்திபட்டு புதுநகரில் வட சென்னை அனல் மின்நிலையம் உள்ளது. இங்கு இரண்டு நிலைகளில் மொத்தம் 1830 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படுகிறது. முதல் நிலையில் மூன்று அலகுகளிலும் தலா 210 முதல் 630 மெகாவாட்டும், இரண்டாம் நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 வீதம் 1200 மெகாவாட்டும் மின்உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் முதல் நிலை முதல் அலகில் கொதிகலன் குழாயில் திடீரென பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த அலகில் உற்பத்தி செய்யப்பட்டு வந்த 210 மெகாவாட் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. மின் உற்பத்தி பாதிக்கப்பட்ட பகுதியை மின் ஊழியர்கள் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.