செய்திகள்

வானூர் அருகே பாம்பு கடித்து பெண் பலி

Published On 2018-07-05 11:50 GMT   |   Update On 2018-07-05 11:50 GMT
வானூர் அருகே பாம்பு கடித்த பெண்ணை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்ற அவர் பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

வானூர்:

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள வரகப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி வெள்ளச்சி (வயது 63). இவர் கோழிகள் வளர்த்து வருகிறார். தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த இவரது கோழி முட்டையிட்டது. அதனை எடுக்க வெள்ளச்சி சென்றபோது, அங்கு கிடந்த பனை ஓலையில் இருந்த நல்லப்பாம்பு அவரை கடித்து விட்டது.

மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் வெள்ளச்சி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து கிளியனூர் போலீசில் வெள்ளச்சியின் மகன் ஆறுமுகம் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News