செய்திகள்

அவனியாபுரத்தில் மனைவி பிரிந்த துக்கத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2018-07-04 11:03 GMT   |   Update On 2018-07-04 11:03 GMT
மனைவி பிரிந்து சென்றதால் விரக்தியடைந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவனியாபுரம்:

அவனியாபுரம் துக்காராம் தெருவைச் சேர்ந்தவர் மனோகரன். இவரது மகன் கல்லாணை (வயது 21). கூலித் தொழிலாளியான இவருக்கும், கவுசல்யா என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.

திருமணமான 3 மாதத்திலேயே கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கவுசல்யா தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

கல்லாணை குடும்பம் நடத்த கவுசல்யாவை பல முறை அழைத்தும் அவர் மறுத்து விட்டதாக தெரிகிறது.

இதனால் விரக்தியுடன் காணப்பட்ட கல்லாணை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவனியாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Tags:    

Similar News