செய்திகள்

நிலக்கோட்டையில் கட்டிட வேலை பார்த்த பெண் பலி

Published On 2018-07-02 14:16 GMT   |   Update On 2018-07-02 14:16 GMT
நிலக்கோட்டையில் கட்டிட வேலையில் ஈடுபட்ட பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

நிலக்கோட்டை:

நிலக்கோட்டை கொங்கர் குளத்தைச் சேர்ந்த கருப்பையா மனைவி பாப்பாத்தி (வயது 45). இவர் கட்டிட வேலை பார்த்து வந்தார். நேற்று நிலக்கோட்டை பெரியார் காலனியைச் சேர்ந்த கணேசன் என்பவரது வீட்டில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தார். தரை தளத்தில் இருந்து மாடிக்கு சிமெண்ட் மூடைகளை ஏற்றிக் கொண்டு இருந்தபோது கால் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த பாப்பாத்தி நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இது குறித்து அவரது மகன் வைரம் கொடுத்த புகாரின் பேரில் நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கருப்பசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News