செய்திகள்

லஞ்சம் வாங்கிய உதவி வேளாண்மை அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை - சிவகங்கை நீதிமன்றம் தீர்ப்பு

Published On 2018-07-01 16:10 GMT   |   Update On 2018-07-01 16:10 GMT
கூட்டுறவு சங்கத்தில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்ப்பதற்கு கையெழுத்திட பரிந்துரைக்க லஞ்சம் வாங்கிய உதவி மேளாண்மை அதிகாரிககு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சிவகங்கை:

சிவகங்கையை அடுத்த நாட்டரசன்கோட்டை அருகே உள்ள சவுமிய நாராயணபுரத்தை சேர்ந்தவர் விவசாயி காளிமுத்து. இவர் கடந்த 2009- ம் ஆண்டு பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர படிவத்தை கொல்லங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பதிவு செய்வதற்காக உதவி வேளாண்மை அதிகாரி பணியாற்றிய ஜேம்ஸ் என்பவரை தொடர்பு கொண்டார். அப்போது அவர் தனக்கு ரூ.200 லஞ்சமாக தந்தால் தான் கூட்டுறவு சங்கத்தில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்ப்பதற்கு கையெழுத்திட பரிந்துரைக்க முடியும் என்று கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து காளிமுத்து கொடுத்த புகாரின் பேரில் சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீசார் உதவி வேளாண்மை அதிகாரி ஜேம்ஸ் லஞ்சம் வாங்கும் போது கையும், களவுமாக அவரை கைது செய்து அவர் மீது சிவகங்கையில் உள்ள லஞ்ச ஒழிப்பிற்கான சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சசிரேகா, குற்றம் சாட்டப்பட்ட, ஜேம்ஸ்க்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். 
Tags:    

Similar News