செய்திகள்

தமிழிசை குறித்து அவதூறு பேச்சு: நாகை மாவட்ட பா.ம.க. செயலாளர் மீது வழக்குபதிவு

Published On 2018-06-29 14:48 GMT   |   Update On 2018-06-29 14:48 GMT
தமிழிசை குறித்து அவதூறாக பேசிய பா.ம.க. செயலாளர் மீது வழக்குபதிவு செய்யப்பட்ட சம்பவம் அக்கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீர்காழி:

நாகை மாவட்டம் சீர்காழி பழைய பஸ் நிலையத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பா.ஜனதா தலைவர் தமிழிசையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நாகை வடக்கு மாவட்ட செயலாளர் லண்டன் அன்பழகன் கலந்து கொண்டு பேசினார். அப்போது தமிழிசையை பற்றி இழிவாகவும், அவதூறாகவும் பேசியதாகவும் கூறப்படுகிறது.

இதுபற்றி சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் சீர்காழி போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நாகை வடக்கு மாவட்ட செயலாளர் லண்டன் அன்பழகன் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் பெண்களை இழிவாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பா.ம.க. செயலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம் அக்கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News