செய்திகள்

பாபநாசம் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

Published On 2018-06-27 11:59 GMT   |   Update On 2018-06-27 11:59 GMT
பாபநாசம் அருகே வீட்டு வேலை செய்யாததை தாய் கண்டித்ததால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

பாபநாசம்:

பாபநாசம் அருகே திருக்கருக்காவூர் கோவில்பத்து கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் துர்கா (வயது 20). இவர் பிளஸ்-2 படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் துர்கா , வீட்டு வேலைகளை செய்யாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் துர்காவை அவரது தாய் கண்டித்து திட்டியதாக தெரிகிறது. இதில் வாழ்க்கையில் வெறுப்படைந்த துர்கா , வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்தார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி துர்கா நேற்று இறந்தார்.

இதுபற்றி பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவழகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News