செய்திகள்
தமிழக அரசியலில் மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது - நீதிபதி கிருபாகரன் பரபரப்பு கருத்து
தமிழகத்தில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும், மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது எனவும் சென்னை ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை:
சென்னை ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன் தமிழக அரசியல் குறித்து பரபரப்பு கருத்துக்களை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு இருந்த வரவேற்பு போல தற்போது யாருக்கும் இல்லை. தமிழகத்தில் மாற்றத்துக்கான நேரம் வந்து விட்டது
நில அபகரிப்பாளர்கள், குண்டர்களுக்கு வாய்ப்பளிக்கும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். ஒரு லட்சம் வாக்காளர்கள் கையெழுத்திட்டால் தான் அரசியல் கட்சியை பதிவு செய்ய வேண்டும் என தகுதி நிர்ணயிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கருத்து தெரிவித்துள்ளார்.