செய்திகள்

கொடுங்கையூர் பகுதியில் வழிப்பறி கொள்ளையை தடுக்க 36 கண்காணிப்பு கேமரா

Published On 2018-06-25 09:10 GMT   |   Update On 2018-06-25 09:10 GMT
கொடுங்கையூர் பகுதியில் வழிப்பறி கொள்ளையை தடுக்க 36 இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளது.
பெரம்பூர்:

கொடுங்கையூர், முத்தமிழ் நகர், கண்ணதாசன் நகர், எவரெடி காலனி பகுதிகளில் தொடர் திருட்டு வழிப்பறி, கொள்ளை, வீடுகளில் பூட்டை உடைத்து திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தது.

இதை தடுக்க யூனியன்கார்டு காலனி குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் அந்த பகுதியில் 36 இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளது. இதனை புளியந்தோப்பு துணை கமி‌ஷனர் சாய்சரன், தேஜஸ்வி, உதவி கமி‌ஷனர் அழகேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இன்ஸ்பெக்டர் புகழேந்தி, சங்க தலைவர் கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News