செய்திகள்

வேதாரண்யம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

Published On 2018-06-23 14:14 GMT   |   Update On 2018-06-23 14:14 GMT
வேதாரண்யம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 1 வாரமாக கோடியக்கரை பகுதியில் குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. இதனால் அருகில் உள்ள தோட்டத்தில் உள்ள கிணற்றில் குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பெண்கள் கூறியுள்ளனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த கோடியக்கரை பெண்கள் 100-க்கும் மேற்பட்டோர் கோடிக்கரை மெயின்ரோட்டில் காலி குடங்களுடன் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு அங்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி ஒரு வாரத்தில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதனை ஏற்று சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் அந்த இடத்தை விட்டு கலைந்து சென்றனர்.

குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் சுமார் 1 மணி நேரம் அந்த இடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News