செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

Published On 2018-06-21 19:20 IST   |   Update On 2018-06-21 19:20:00 IST
மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவில்பட்டி:

மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்களை கைது செய்வதை நிறுத்தக்கோரியும், அவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வலியுறுத்தியும் தூத்துக்குடி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட குழு சார்பில் கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. 

தாலுகா செயலாளர் பாபு தலைமை வகித்தார். தூத்துக்குடி மாநகர செயலாளர் ஞானசேகர், ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் அழகு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் எஸ்.அழகு முத்துபாண்டியன் கோரிக்கைகளை விளக்கி பேசினர். 

நகர செயலாளர் சரோஜா, ஒன்றிய செயலாளர்கள் வேல்முருகன், பிச்சை, அம்பிகாபதி உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Tags:    

Similar News