செய்திகள்

ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் வெற்றி பெற்றது செல்லும் - சென்னை ஐகோர்ட் தீர்ப்பு

Published On 2018-06-20 05:39 GMT   |   Update On 2018-06-20 05:39 GMT
சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. #TTVDhinakaran #RKNagarBypoll
சென்னை:

ஜெயலலிதா மரணம் அடைந்ததைத் தொடர்ந்து காலியாக இருந்த சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் டிடிவி தினகரன் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வின் வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ் ஆகியோர் தோல்வி அடைந்தனர். தமிழக அரசியல் வட்டாரத்தில் இந்த தேர்தல் முடிவுகள் பரபரப்பாக பேசப்பட்டது. குறிப்பாக பணம் கொடுத்து வாக்குகளை வாங்கிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் டிடிவி தினகரன் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி சுயேட்சை வேட்பாளர் எம்.எல்.ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.



இவ்வழக்கின் வாதப்பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது டிடிவி தினகரன் வெற்றி செல்லும் என்று தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், சுயேட்சை வேட்பாளரின் மனுவை தள்ளுபடி செய்தது. #TTVDhinakaran #RKNagar #RKNagarBypoll #CaseAgainstTTV

Tags:    

Similar News