செய்திகள்

ஸ்ரீமுஷ்ணம் அருகே நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலை

Published On 2018-06-19 11:40 GMT   |   Update On 2018-06-19 11:45 GMT
ஸ்ரீமுஷ்ணம் அருகே நர்சிங் கல்லூரி மாணவி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீமுஷ்ணம்:

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள காணூர் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன், விவசாயி. இவரது மகள் சுகந்தி (வயது 19). இவர் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் சுகந்தி வீட்டில் இருந்த வி‌ஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். இதை பார்த்து வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் சுகந்தியை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று அதிகாலை சுகந்தி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சுகந்தி வயிற்று வலியினால் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. #Tamilnews
Tags:    

Similar News