செய்திகள்

பள்ளிக்கரணையில் அரசு டாக்டர் தற்கொலை- போலீசார் விசாரணை

Published On 2018-06-19 09:54 GMT   |   Update On 2018-06-19 09:54 GMT
பள்ளிக்கரணை அடுக்கு மாடி குடியிருப்பில் 4-வது மாடியில் இருந்து குதித்து அரசு டாக்டர் தற்கொலை தற்கொலை செய்துகொண்டார்.
பள்ளிக்கரணை:

பள்ளிக்கரணை விஜய சந்திரன் நகரில் அடுக்கு மாடி குடியிருப்புகள் உள்ளன.

இங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் நடராஜ். இவருடைய மகன் ஆனந்த் (32). இவர் சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள பல்நோக்கு அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வந்தார். நேற்று இரவு பள்ளிக்கரணையில் உள்ள அடுக்கு மாடி வீட்டில் ஆனந்த் இருந்தார்.

இரவு 11 மணி அளவில் டாக்டர் ஆனந்த் 4-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆனந்தை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து ஆனந்த் உடல் மருத்துவ பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

டாக்டர் ஆனந்துக்கு பதவி உயர்வு கிடைக்க இருந்தது. இந்த நிலையில் அவர் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்பது குறித்து பள்ளிக்கரணை போலீசார் விசாரணை நடத்திவருகிறார்கள். #Tamilnews
Tags:    

Similar News