செய்திகள்
தேனி அருகே 2 குழந்தைகள்- மனைவியை தவிக்க விட்டு வாலிபர் மாயம்
தேனி அருகே மனைவி, 2 குழந்தைகளை தவிக்க விட்டு மாயமான வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே உள்ள அரண்மனைபுதூர் வசந்தம் நகரை சேர்ந்தவர் பொன்னுத்துரை (வயது34). இவரது மனைவி அபிராமி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியில் செல்வதாக கூறிசென்ற பொன்னுத்துரை மாயமானார். இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அபிராமி அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தார்.
எங்கு தேடியும் கிடைக்காததால் பழனிசெட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி மாயமான பொன்னுத்துரையை தேடி வருகின்றனர்.