செய்திகள் (Tamil News)

காட்டுமன்னார்கோவில் அருகே கல்லூரி மாணவி மாயம்

Published On 2018-06-18 10:35 GMT   |   Update On 2018-06-18 10:35 GMT
காட்டுமன்னார்கோவில் அருகே கல்லூரி மாணவி மாயமான சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் வழக்குப்பதிவு செய்து தேடிவருகிறார்.
ஸ்ரீமுஷ்ணம்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள வடக்கு கஞ்ச கொல்லை பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன். இவரது மகள் வசந்தராணி (வயது17).

இவர் கும்பகோணம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

சம்பவத்தன்று இவர் வெளியே சென்று வருவதாக வீட்டில் கூறி விட்டு சென்றார்.

ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை

இதை தொடர்ந்து வசந்த ராணியின் தாய் வசந்தா காட்டுமன்னார் கோவில் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் வழக்குப்பதிவு செய்து மாயமான வசந்தராணியை தேடிவருகிறார்.

Tags:    

Similar News