செய்திகள்

தாரமங்கலம் அருகே இளம்பெண்ணை தாக்கிய விசைத்தறி தொழிலாளி கைது

Published On 2018-06-17 14:46 GMT   |   Update On 2018-06-17 14:46 GMT
பணத் தகராறில் இளம்பெண்ணை தாக்கிய விசைத்தறி தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

தாரமங்கலம்:

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள சின்னகாடம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கமலா (வயது 32). இவரது தாயார் தவமணி. இந்த நிலையில் அதே ஊரை சேர்ந்த பெரியசாமி (39) என்பவர் தவமணியிடம் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கியதாக தெரிகிறது. மேலும் கமலாவின் அத்தை அமலாவதியிடம் இருந்தும் ரூ.60 ஆயிரம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்த பணத்தில் பெரியசாமி வீட்டில் விசைத்தறி கூடம் அமைத்தார். ஆனால் பணம் வாங்கி 6 வருடங்கள் ஆகியும் அவர் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதனால் அவரது வீட்டிற்கு சென்று கமலா வாங்கிய கடனை திருப்பி கொடு என பெரியசாமியிடம் கேட்டார். அதற்கு அவர் பணம் கொடுக்க முடியாது என்றார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த பெரியசாமி சரிமாரியாக கமலாவை அடித்து உதைத்ததுடன் இனிமேல் பணம் கேட்டு வந்தால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாக தெரிகிறது.

காயம் அடைந்த அவர் தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜூவ் வழக்குப்பதிவு செய்து பெரியசாமியை கைது செய்தார். பின்னர் போலீசார் அவரை ஓமலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News