செய்திகள்

காதலனுடன் பேசக்கூடாது என தந்தை கண்டித்ததால் நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலை

Published On 2018-06-15 10:11 GMT   |   Update On 2018-06-15 10:11 GMT
பிரம்மதேசம் அருகே காதலனுடன் பேசக்கூடாது என தந்தை கண்டித்ததால் நர்சிங் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மரக்காணம்:

விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசத்தை அடுத்த கட்டளை கிராமத்தை சேர்ந்தவர் கஜேந்திரன் (வயது 47). இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

இவரது மகள் காமாட்சி (17). இவர் செஞ்சி அருகே ஆலம்பூண்டியில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்தநிலையில் வேன் டிரைவர் ஒருவருக்கும், காமாட்சிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. இதை அறிந்த கஜேந்திரன் தனது மகள் காமாட்சியை கண்டித்தார். காதலனுடன் பேசக்கூடாது என்று அவர் கூறியதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த காமாட்சி நேற்று வீட்டில் துப்பட்டாவால் தூக்குப் போட்டுக் கொண்டார். வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு காமாட்சியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து பிரம்மதேசம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்- இன்ஸ்பெக்டர் பாபு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.  #Tamilnews
Tags:    

Similar News