செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியன் பள்ளிகளில் சத்துணவுடன் முட்டை சீராக வழங்கப்படுகிறதா? - அதிகாரி ஆய்வு
ஸ்ரீவில்லிபுத்தூரில், சத்துணவுடன் வழங்கப்படும் முட்டைகள் மாணவர்களுக்கு சீராக வழங்கப்படுகிறதா? என்பது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு செய்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சத்துணவுடன் தினமும் முட்டை வழங்கப்பட்டு வருகிறது. இவை மாணவர்களுக்கு முறையாக வழங்கப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டிருந்தது.
இதன்படி, ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வெள்ளைச்சாமி, மம்சாபுரம், வன்னியம் பட்டி பகுதிகளில் உள்ள பள்ளிகளை ஆய்வு செய்தார். மேலும் பழுதடைந்த சத்துணவுக் கூடங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் கூறுகையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் சில நாட்களாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முட்டை விநியோகம் குறித்த எந்த புகாரும் இதுவரை எழவில்லை என்றார்.
தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சத்துணவுடன் தினமும் முட்டை வழங்கப்பட்டு வருகிறது. இவை மாணவர்களுக்கு முறையாக வழங்கப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டிருந்தது.
இதன்படி, ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வெள்ளைச்சாமி, மம்சாபுரம், வன்னியம் பட்டி பகுதிகளில் உள்ள பள்ளிகளை ஆய்வு செய்தார். மேலும் பழுதடைந்த சத்துணவுக் கூடங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் கூறுகையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் சில நாட்களாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முட்டை விநியோகம் குறித்த எந்த புகாரும் இதுவரை எழவில்லை என்றார்.