கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்வு
சென்னை:
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து அதிக அளவில் காய்கறிகள் வருவது வழக்கம். ஆனால் கடந்த சில நாட்களாக குறைவான காய்கறிகள்தான் மார்க்கெட்டுக்கு வருகிறது.
இதன் காரணமாக காய்கறி விலை உயர்ந்து வருகிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்ந்துள்ளதால் மற்ற மார்க்கெட்டிலும் காய்கறி விலை உயர்ந்துள்ளது.
சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ரகுபதி காய்கறி கடையில் இன்றைய விலை விபரம் கிலோவுக்கு வருமாறு:-
கத்தரிக்காய் ரூ.20, தக்காளி ரூ.16, வெண்டைக்காய் ரூ.20, பீன்ஸ் ரூ.70, கேரட் ரூ.40, முள்ளங்கி ரூ.25, இஞ்சி ரூ.80, அவரைக்காய் ரூ.60.
இதுபற்றி கடைக்காரர் ரகுபதி கூறுகையில், வெயில் அதிகமானதால் கோயம்பேடுக்கு காய்கறி வரத்து குறைந்துள்ளது. இதனால் விலையேற்றம் உள்ளதாக தெரிவித்தார்.
சிந்தாதிரிப்பேட்டை மார்க்கெட்டை விட சூப்பர் மார்க்கெட், மளிகைக் கடைகளில் இன்னும் 10 ரூபாய் அதிகம் இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர். #tamilnews