செய்திகள்

பென்னாகரம் அருகே விபத்து: கட்டிட மேஸ்திரி- பெயிண்டர் பலி

Published On 2018-06-10 12:52 GMT   |   Update On 2018-06-10 12:52 GMT
அரசு டவுன் பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கட்டிட மேஸ்திரி, பெயிண்டர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பென்னாகரம்:

தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த ரங்காபுரம் அருந்ததியர் காலனியைச் சேர்ந்த நாகராஜ் மகன் சத்தியநாராயணன் (வயது 20).

அதே பகுதியைச் சேர்ந்த சந்திரன் மகன் ரவிச்சந்திரன் (25). இவர்கள் 2 பேரும் பென்னாகரத்தில் இருந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். இரவு 10.30 மணிக்கு ரங்காபுரம் அருகே வந்தபோது பாலக்கோட்டில் இருந்து பென்னாகரம் சென்ற அரசு டவுன் பஸ் மீது இவர்களது மோட்டார் சைக்கிள் எதிர் பாராதவிதமாக மோதியது.

இந்த விபத்தில் 2 பேரும் பஸ்சின் பின்சக்கரத்தில் சிக்கி பலியானார்கள். இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் பென்னாகரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரின் பிணங்களையும் கைப்பற்றி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் இறந்த சத்திய நாராயணன் பெயிண்டராக வேலை பார்த்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை. விபத்தில் இறந்த ரவிச்சந்திரன் கட்டிட மேஸ்திரி ஆவார். இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. இவருக்கு 10 மாத கைக் குழந்தை ஒன்று உள்ளது.

Tags:    

Similar News