செய்திகள்

உடையார்பாளையத்தில் மாயமான பெண் மீட்பு: வாலிபர் கைது

Published On 2018-06-02 14:51 GMT   |   Update On 2018-06-02 14:51 GMT
உடையார்பாளையத்தில் மாயமான பெண்ணை போலீசார் மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் அப் பெண்ணுடன் இருந்த வாலிபரை கைது செய்தனர்.
அரியலூர்:

அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் அருகே உள்ள பாணகிராயன் பட்டியை சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் இலக்கியா. இவர் உடுமலை பேட்டையில் உள்ள ஒரு மில் ஆலையில் வேலை பார்த்து வந்தார். 

இந்நிலையில் 13.9.17 அன்று முதல் இலக்கியாவை காணவில்லை. இது குறித்து சங்கர் தனது மகள் இலக்கியாவை கடத்தி சென்று விட்டதாக உடையார் பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து கடத்தப்பட்ட இலக்கியா குறித்து விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில் இலக்கியா கல்கத்தாவில் இருப்பது தெரியவந்தது. உடனே உடையார்பாளையம போலீசார் கல்கத்தா சென்றனர். பின்னர் கல்கத்தா போலீசாரின் உதவியுடன் இலக்கியாவை மீட்டனர். அவருடன் இருந்த கல்கத்தாவை சேர்ந்த வாலிபர் அபிசேக் தப்பி ஒடிவிட்டார். இலக்கியாவை மீட்ட உடையார் பாளையம் போலீசார் அவரை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 

கல்கத்தா போலீசார் அபிசேக்கை தேடி வந்தனர். இந் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அபிசேக்கை கல்கத்தா போலீசார் கைது செய்தனர். பின்னர் இது குறித்து உடையார் பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தலைமையில் போலீசார் கல்கத்தா சென்று அபிசேக்கை கைது உடையார் பாளையத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அபிசேக்கை சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News