செய்திகள்

தேவிபட்டிணத்தில் காதலித்த பெண்ணை ஏமாற்றி கர்ப்பிணியாக்கிய வாலிபர்

Published On 2018-06-01 17:09 IST   |   Update On 2018-06-01 17:09:00 IST
ஆசை வார்த்தை கூறி பெண்ணை ஏமாற்றி கர்ப்பிணியாக்கிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டிணம் அருகே உள்ள சக்கரவநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மகள் திவ்யா (வயது 19).

இவர் ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

நானும், ரெகுநாதபுரம் சக்திபுரத்தை சேர்ந்த முருகேசன் மகன் ராஜ குருவும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தோம். அப்போது திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி என்னிடம் நெருங்கி பழகினார். இதில் நான் கர்ப்பமானேன். உடனே என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராஜகுருவிடம் கூறினேன். அப்போது அவர் என்னை திருமணம் செய்ய மறுத்து விட்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த புகாரின் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் கலாராணி வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ராஜகுருவை தேடி வருகிறார்.

Tags:    

Similar News