செய்திகள்

முசிறியில் கல்லூரி மாணவி மாயம்

Published On 2018-05-31 19:43 IST   |   Update On 2018-05-31 19:43:00 IST
முசிறியில் கல்லூரிக்கு சென்ற மாணவி மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.
முசிறி:

தொட்டியம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். கூலிவேலை செய்து வருகிறார். இவரது மகள் அபிநயா (18). முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. முதலாம்ஆண்டு படித்து வருகிறார். 

இந்த நிலையில் கடந்த 25-ந்தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்ற அபிநயா வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த கோவிந்தராஜ் தனது உறவினர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடி பார்த்தும் அபிநயா குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. 

இதையடுத்து முசிறி போலீசில் கோவிந்தராஜ் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிந்து காணாமல் போன கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News