செய்திகள்

ராமநாதபுரம் அருகே நின்ற லாரி மீது கார் மோதல்: பெண் பலி

Published On 2018-05-27 19:39 IST   |   Update On 2018-05-27 19:39:00 IST
உப்பூர் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில் பெண் பலியானார். 4 பேர் காயம் அடைந்தனர்.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் அருகே கிழக்கு கடற்கரைச்சாலையில் கடலூருக்கும் சேந்தனேந்தலுக்கும் இடைப்பட்ட பகுதியில் லாரி நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக பட்டுக்கோட்டையிலிருந்து கீழக்கரை நோக்கி வந்த கார் லாரியின் பின்புறமாக மோதியது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ராமநாத புரம் மாவட்டம் கீழக்கரை அருகேயுள்ள அலவாய்க் கரைவாடி கிராமத்தைச் சேர்ந்த ராஜாங்கம் மனைவி சாந்தி (வயது35) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சாந்தியின் தந்தை முத்து ராமலிங்கம் (70), சித்தப்பா ராமச்சந்திரன் (60), உறவினர் முனித்துரை (53) மற்றும் கார் டிரைவர் வெங்கடேஷ் ஆகிய 4 பேரும் காயம் அடைந்தனர். அனைவரும் ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுதொடர்பாக திருப்பாலைக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணிமுத்து வழக்குப்பதிவு செய்து கும்பகோணத்தை சேர்ந்த லாரி டிரைவர் கண்ணன் (32) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News