செய்திகள்
எஸ்.வி. சேகர் கைது செய்யாதது குறித்து காவல்துறையிடம் தான் கேட்க வேண்டும் - தமிழிசை
பெண்கள் குறித்து இழிவாக பேசிய எஸ்.வி. சேகரை கைது செய்யாதது குறித்து காவல்துறையிடம் தான் கேட்க வேண்டும் என்று நிருபர்கள் பேட்டியின் போது தமிழிசை சவுந்தர்ராஜன் கூறினார்.
கோவை:
தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
காவிரி இன்று மீட்டெடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு மத்திய அரசின் வரைவு திட்ட அறிக்கை முக்கிய பங்கு வகிக்கிறது.
காவிரி வெற்றி விழா மற்றும் மத்திய அரசு தமிழகத்திற்கு செய்த நல்ல திட்டங்கள் குறித்த விளக்க கூட்டங்கள் பாரதிய ஜனதா சார்பில் நடத்தப்படுகிறது. இன்று பொள்ளாச்சியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறேன்.
இது போல் 40 தொகுதிகளிலும் நடத்த உள்ளோம். கருணாநிதி பிறந்த நாளை காவிரி வெற்றி விழாவாக கொண்டாடுவதாக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி இருக்கும் கருத்து தவறானது.
அவர்கள் ஆட்சி காலத்தில் செய்ய தவறியதால் அப்பட்டமாக கிடைத்த தோல்வி இன்று மத்திய அரசால் வெற்றியாக மாறி உள்ளது.
காவிரி பிரச்சினையில் குமாரசாமி கருத்தை ஏற்று கொள்ள முடியாது. முன்பு எதற்கெடுத்தாலும் காவிரி பிரச்சினைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் குமாரசாமி கருத்துக்கு ஏன் பதில் சொல்லவில்லை.
தமிழகத்தில் எதிர் கட்சிகளின் எண்ணம் பாரதிய ஜனதா, மோடியை எதிர்க்க வேண்டும் என்பதே ஆகும். சுயநலம் என்று வந்துவிட்டால் எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள்.
கர்நாடக தேர்தலில் தோல்வி அடைந்த காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி ஆட்சி பொறுப்பேற்க மக்கள் விரும்பவில்லை. அதனால் தான் அதிக இடங்களில் வெற்றி பெற்ற நாங்கள் ஆட்சி அமைக்க முயற்சி செய்தோம்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு மத்திய அரசுக்கு தோல்வி என்று கூற முடியாது. இதனை ஜி.எஸ்.டி.வரிக்குள் கொண்டு மத்திய அரசு முயற்சி செய்வதாக மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு அனைத்து முயற்சிகளும் செய்து வருகிறது. பெட்ரோல், டீசலுக்கு மத்திய அரசு 30 சதவீதமும், மாநில அரசு 50 சதவீதமும் வரி விதிக்கிறது. இதற்கான வரியை குறைக்க மாநில அரசு ஒத்துழைக்க வேண்டும். இதற்காக நான் கடிதம் எழுதி உள்ளேன்.
எஸ்.வி. சேகர் பிரச்சினையை பொறுத்த வரை அவரை கைது செய்யாதது குறித்து காவல்துறை அதிகாரிகளிடம் தான் கேட்க வேண்டும். பெண்களை யார் இழிவாக பேசினாலும் அவர்களை காப்பாற்ற பாரதிய ஜனதா முயற்சி செய்யாது. எஸ்.வி. சேகர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
கட்சி ரீதியாக மேல் நடவடிக்கை குறித்து வழிமுறைகள் உள்ளது. அதனை எடுத்து வருகிறது.
நிபா வைரஸ் பரவி வருகிறது. எப்படி காய்ச்சல் வருகிறது. அதற்கான தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழக, கேரள, மத்திய சுகாதாரத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
காவிரி இன்று மீட்டெடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு மத்திய அரசின் வரைவு திட்ட அறிக்கை முக்கிய பங்கு வகிக்கிறது.
காவிரி வெற்றி விழா மற்றும் மத்திய அரசு தமிழகத்திற்கு செய்த நல்ல திட்டங்கள் குறித்த விளக்க கூட்டங்கள் பாரதிய ஜனதா சார்பில் நடத்தப்படுகிறது. இன்று பொள்ளாச்சியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறேன்.
இது போல் 40 தொகுதிகளிலும் நடத்த உள்ளோம். கருணாநிதி பிறந்த நாளை காவிரி வெற்றி விழாவாக கொண்டாடுவதாக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி இருக்கும் கருத்து தவறானது.
அவர்கள் ஆட்சி காலத்தில் செய்ய தவறியதால் அப்பட்டமாக கிடைத்த தோல்வி இன்று மத்திய அரசால் வெற்றியாக மாறி உள்ளது.
காவிரி பிரச்சினையில் குமாரசாமி கருத்தை ஏற்று கொள்ள முடியாது. முன்பு எதற்கெடுத்தாலும் காவிரி பிரச்சினைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் குமாரசாமி கருத்துக்கு ஏன் பதில் சொல்லவில்லை.
தமிழகத்தில் எதிர் கட்சிகளின் எண்ணம் பாரதிய ஜனதா, மோடியை எதிர்க்க வேண்டும் என்பதே ஆகும். சுயநலம் என்று வந்துவிட்டால் எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள்.
கர்நாடக தேர்தலில் தோல்வி அடைந்த காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி ஆட்சி பொறுப்பேற்க மக்கள் விரும்பவில்லை. அதனால் தான் அதிக இடங்களில் வெற்றி பெற்ற நாங்கள் ஆட்சி அமைக்க முயற்சி செய்தோம்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு மத்திய அரசுக்கு தோல்வி என்று கூற முடியாது. இதனை ஜி.எஸ்.டி.வரிக்குள் கொண்டு மத்திய அரசு முயற்சி செய்வதாக மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு அனைத்து முயற்சிகளும் செய்து வருகிறது. பெட்ரோல், டீசலுக்கு மத்திய அரசு 30 சதவீதமும், மாநில அரசு 50 சதவீதமும் வரி விதிக்கிறது. இதற்கான வரியை குறைக்க மாநில அரசு ஒத்துழைக்க வேண்டும். இதற்காக நான் கடிதம் எழுதி உள்ளேன்.
எஸ்.வி. சேகர் பிரச்சினையை பொறுத்த வரை அவரை கைது செய்யாதது குறித்து காவல்துறை அதிகாரிகளிடம் தான் கேட்க வேண்டும். பெண்களை யார் இழிவாக பேசினாலும் அவர்களை காப்பாற்ற பாரதிய ஜனதா முயற்சி செய்யாது. எஸ்.வி. சேகர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
கட்சி ரீதியாக மேல் நடவடிக்கை குறித்து வழிமுறைகள் உள்ளது. அதனை எடுத்து வருகிறது.
நிபா வைரஸ் பரவி வருகிறது. எப்படி காய்ச்சல் வருகிறது. அதற்கான தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழக, கேரள, மத்திய சுகாதாரத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.