செய்திகள்

பெற்றோர் கண்டித்ததால் மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து தற்கொலை செய்த வாலிபர்

Published On 2018-05-12 16:56 GMT   |   Update On 2018-05-12 16:56 GMT
ஆண்டிப்பட்டி அருகே பெற்றோர் கண்டித்ததால் மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஜக்கம்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. அவரது மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு 3 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இதில் 2-வது மகன் குமரேசன் (வயது 26). இவர் போதைக்கு அடிமையானவர். வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்தார்.

எனவே பெற்றோர் இவரை கண்டித்தனர். மனமுடைந்த குமரேசன் தற்கொலை செய்வது என தீர்மானித்தார். அதன்படி டாஸ்மாக் கடையில் மது வாங்கி வந்தார். அதில் வி‌ஷத்தை கலந்து குடித்து குமரேசன் மயங்கி கிடந்தார்.

இதனை பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை தூக்கிக் கொண்டு தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News