செய்திகள்
தந்தையின் டாக்டர் கனவை நனவாக்குவதே லட்சியம் - மாணவி தேவி ஐஸ்வர்யா
நீட் தேர்வுக்கு தன்னை அழைத்துச் சென்று வீடு திரும்பும் போது உயிரிழந்த தந்தையின் கனவை நனவாக்குவதே எனது லட்சியம் என அவரது மகள் தேவி ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார்.
சிவகங்கை:
மதுரையில் உள்ள தனியார் கல்லூரிக்கு நீட் தேர்வு எழுத அழைத்து சென்ற மகளை மீண்டும் கூட்டி செல்லும் போது கண்ணன் என்பவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
தந்தையை இழந்து தவிக்கும் தேவிஐஸ்வர்யா கண்ணீர் மல்க கூறியதாவது:-
என்னை மருத்துவராக்க தந்தை ஆசைப்பட்டார். அவரது கனவை நிச்சயம் நனவாக்குவேன். எனது உயர்கல்விக்கு அரசு உதவி செய்ய வேண்டும்.
குழந்தை பருவம் முதலே நீ டாக்டராக வேண்டும் என தந்தை கூறி வந்ததால் நானும் அதனை மனதில் கொண்டு படித்தேன். ஆனால் எதிர் பாராதவிதமாக எனது தந்தை இறந்து விட்டார். அவரது கனவை நனவாக்குவதே எனது லட்சியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மதுரையில் உள்ள தனியார் கல்லூரிக்கு நீட் தேர்வு எழுத அழைத்து சென்ற மகளை மீண்டும் கூட்டி செல்லும் போது கண்ணன் என்பவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
தந்தையை இழந்து தவிக்கும் தேவிஐஸ்வர்யா கண்ணீர் மல்க கூறியதாவது:-
என்னை மருத்துவராக்க தந்தை ஆசைப்பட்டார். அவரது கனவை நிச்சயம் நனவாக்குவேன். எனது உயர்கல்விக்கு அரசு உதவி செய்ய வேண்டும்.
குழந்தை பருவம் முதலே நீ டாக்டராக வேண்டும் என தந்தை கூறி வந்ததால் நானும் அதனை மனதில் கொண்டு படித்தேன். ஆனால் எதிர் பாராதவிதமாக எனது தந்தை இறந்து விட்டார். அவரது கனவை நனவாக்குவதே எனது லட்சியம்.
இவ்வாறு அவர் கூறினார்.