செய்திகள்

சேலம் அம்மாப்பேட்டையில் விசைத்தறி கூடத்தில் ரூ. 4 லட்சம் பொருட்கள் திருட்டு

Published On 2018-05-04 11:57 GMT   |   Update On 2018-05-04 11:57 GMT
சேலம் அம்மாப்பேட்டையில் விசைத்தறி கூடத்தில் ரூ. 4 லட்சம் பொருட்கள் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்:

சேலம் அம்மாப்பேட்டை காமராஜ் நகரில் கணேசன் (வயது 35) என்பவர் விசைத்தறி கூடம் நடத்தி வந்தார். இந்த விசைத்தறி கூடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது.

இந்த நிலையில் விசைத்தறி கூடத்தில் இருந்த எலக்ட்ரானிக்ஸ் கார்டு-22 உள்பட ரூ.4 லட்நத்து 4 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர்கள் யாரோ திருடிச்சென்றனர்.

இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீசில் கணேசன் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News