செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 3 பெண்கள் மாயம்

Published On 2018-05-03 09:25 GMT   |   Update On 2018-05-03 09:25 GMT
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் 100-க்கும் மேற்பட்ட இளம்பெண்கள், மாணவிகள் மாயமாகி உள்ளனர். இந்த நிலையில் தற்போது மேலும் 3 பெண்கள் மாயமாகி உள்ளனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் 100-க்கும் மேற்பட்ட இளம்பெண்கள், மாணவிகள் மாயமாகி உள்ளனர். பலர் விருப்பமில்லா திருமணம் மற்றும் வயதானவர்களை திருமணம் செய்வதே இதற்கு காரணம் என்று போலீசார் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் தற்போது மேலும் 3 பெண்கள் மாயமாகி உள்ளனர். புல்லரம்பாக்கத்தைச் சேர்ந்த சந்தியா, புதுகும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த யுவாலினி (18), செங் குன்றம் காந்தி நகரைச் சேர்ந்த மான்சி (19) ஆகியோர மாயமாகி இருக்கிறார்கள். இவர்களில் மான்சி கல்லூரி மாணவி ஆவார்.
Tags:    

Similar News