செய்திகள்

கருங்கல்பாளையம் காவிரி பாலம் பகுதியில் ரூ.9 லட்சம் மதிப்பில் உயர்மின் கோபுர விளக்குகள் அமைப்பு

Published On 2018-05-02 22:34 IST   |   Update On 2018-05-02 22:34:00 IST
கருங்கல்பாளையம் காவிரி பாலம் பகுதியில் ரூ.9 லட்சம் மதிப்பில் உயர்மின் கோபுர விளக்குகள் எம்.எல்.ஏ.க்கள் திறந்து வைத்தனர்
ஈரோடு:

ஈரோடு, கருங்கல் பாளையம் வண்டியூரான் கோவில் வீதி முதல் காவிரிகரை பாலம் வரை சாலையில் நடுபகுதியில் 14 மின்கம்பங்களில் புதிதாக 28 உயர்மின் கோபுர விளக்குகள் ரூ.9 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளன.

இதனை பொது மக்கள் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ். தென்னரசு ஆகியோர் தலைமை தாங்கி புதிய உயர்மின் கோபுர விளக்குகளை திறந்து வைத்தனர்.

நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் கேசவமூர்த்தி, சூரம்பட்டி ஜெகதீஷ், கோவிந்த்ராஜ், முருகுசேகர், அண்ணா தொழிற்சங்க இணை செயலாளர் மாதையன், அண்ணா போக்குவரத்து இணை செயலாளர் ஜீவா ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News