ஈரோடு மாவட்டத்தில் மே தினத்தில் தடையை மீறி மது விற்ற 16 பேர் கைது
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் மே தினமான நேற்று பல்வேறு இடங்களில் தடையை மீறி மது விற்ற 16 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கடம்பூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட கோட்டமாளத்தில் மது விற்ற வெங்கட்டய்யன்(வயது59) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 20 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போன்று கடத்தூர் பாப்பத்தி காட்டு தோட்டத்தில் மது விற்ற முத்துசாமி(49), கோபி, குளத்துக்கடையில் மது விற்ற மணிகண்டன் (30), சத்தியமங்கலம், காளிகுளம் பகுதியில் மது விற்ற தங்கவேல்(32),
ஈரோடு, சூரம்பட்டியில் மது விற்ற கமலநாதன்(31), சூரம்பட்டி வலசில் மது விற்ற வேல்முருகன்(34), கவுந்தப்பாடி, குஞ்சரமடையில் மது விற்ற பிரகாஷ்(31), பவானிசாகர், பார்க்ரோட்டில் மதுவிற்ற ராஜ்குமார்(34), சிறுவலூர், அம்மாசை கவுண்டர் குட்டையப்பாளையத்தில் மது விற்ற சுப்பிரமணி (51) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதே போன்று ஆப்பக்கூடல், சத்திநகரில் மது விற்ற பாலகிருஷ்ணன்(29), ஆப்பக்கூடல் ஏரி பகுதியில் மது விற்ற கவுதமன்(28), திங்களூர், காசுக்காரன் பாளையத்தை சேர்ந்த பழனிசாமி(42), பவானி காமராஜ்நகரை சேர்ந்த சம்பத்குமார்(47), பவானி, சேர்வராயன் பாளையத்தை சேர்ந்த ஜானகிராமன்(36),
வரப்பாளையம், கொளத்துகாடை சேர்ந்த ராசன்(43), சித்தோடு நாகேந்திரபாபு(42) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மொத்தம் மாவட்டம் முழுவதும் 16 பேர் கைதானார்கள். இவர்களிடம் இருந்து 184 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.