செய்திகள்

பண்ருட்டி அருகே சாராயம் விற்பனை செய்த 2 பேர் கைது

Published On 2018-04-09 17:13 GMT   |   Update On 2018-04-09 17:13 GMT
பண்ருட்டி அருகே போலீசார் ரோந்து சென்றனர். அப்போது வீட்டில் வைத்து சாராயம் விற்பனை செய்த 2 பேரை கைது செய்தனர்.
பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான போலீசார் புதுப்பேட்டை, காடாம்புலியூர் உள்பட பல்வேறு பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது எஸ்.ஏரிப்பாளையம் பகுதியில் உள்ள வீடுகளில் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் வைத்து சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த தாமரை (வயது 27) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்த 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் சேமக்கோட்டை ஏரிக்கரையில் சாராயம் விற்று கொண்டிருந்த செம்மேடு பகுதியை சேர்ந்த சர்க்கரை (75) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 60 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News