செய்திகள்

கடலூர் பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

Published On 2018-04-09 12:04 GMT   |   Update On 2018-04-09 12:04 GMT
கடலூர் அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர்:

கடலூர் புதுநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவியரசன் மற்றும் போலீசார் தீபன்நகர் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்குள்ள தென்னந்தோப்பில் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த எஸ்.என்.சாவடி கெடிலம் தெருவை சேர்ந்த சூர்யா (வயது 25), ராஜா (28), செல்வராஜ் மகன் மணிவண்ணன் (27), செம்மண்டலம் கார்த்திக் (49) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

Tags:    

Similar News