செய்திகள்

சிதம்பரத்தில் திடீர் மழை பொதுமக்கள் மகிழ்ச்சி

Published On 2018-04-09 10:41 GMT   |   Update On 2018-04-09 10:41 GMT
சிதம்பரத்தில் இன்று காலை திடீரென மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சிதம்பரம்:

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் சுட்டெரித்தது. பொதுமக்கள் வெளியே செல்லவே அச்சப்பட்டனர். இந்த நேரத்தில் மழை பெய்யதா என நினைத்தனர். 

இந்த நிலையில் இன்று காலை சிதம்பரத்தில் திடீரென தூறலுடன் மழை பெய்ய தொடங்கியது. 2 மணி நேரம் மழை நீடித்தது. இதேப்போல் சிதம்பரத்தை சுற்றியுள்ள பகுதிகளிலும் மழை பெய்தது. இந்த திடீர் மழையால் சிதம்பரத்தில் வெயிலின் தாக்கம் குறைந்து இதமான சூழ்நிலை நிலவுகிறது.

பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News