செய்திகள்

ஈரோடு பஸ் நிலையத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

Published On 2018-04-07 17:33 IST   |   Update On 2018-04-07 17:33:00 IST
ஈரோடு பஸ் நிலையத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு டவுன் போலீசார் நேற்று இரவு ஈரோடு பஸ் நிலைய பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த டவுன் போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் பவானிசாகரில் உள்ள அகதிகள் முகாமில் வசிக்கும் ரவி(வயது29) என்பதும், அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டது என்பதும் தெரிய வந்தது.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஈரோடு பஸ் நிலையம் அருகில் உள்ள பிள்ளையார் கோவில் பகுதியில் நிறுத்தி வைக்கபட்டிருந்த மோட்டார் சைக்கிள்களில் ஒரு மோட்டார் சைக்கிளை ரவி திருடி வந்தது தெரிய வந்தது.

இது குறித்து வழக்கு பதிவு செய்த டவுன் போலீசார் ரவியை கைது செய்தனர். அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து ரவி வேறு எங்காவது கைவரிசை காட்டி உள்ளாரா? என்றும் விசாரணை நடந்து வருகிறது.

Similar News