செய்திகள்

மத்திய அரசை கண்டித்து கள்ளக்குறிச்சியில் தே.மு.தி.க. நாளை ஆர்ப்பாட்டம்

Published On 2018-04-06 22:13 IST   |   Update On 2018-04-06 22:13:00 IST
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் காலம் கடத்தும் மத்திய அரசை கண்டித்து நாளை கள்ளக்குறிச்சியில் தே.மு.தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழக செயலாளர் வெங்கடேசன் வெளியிட்டள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காவிரி கண்காணிப்பு மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.

இந்த ஆணையை ஏற்காமல் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் காலம் கடத்தும் மத்திய அரசு தமிழக விவசாயிகளுக்கு எதிரான போக்கைக் கண்டித்து வருகின்றது.

நாளை (7-ந் தேதி) காலை 10 மணியளவில் கள்ளக்குறிச்சியில் உள்ள தபால் நிலையம் முன்பு விழுப்புரம் மாவட்ட தே.மு.தி.க.சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளும், பொதுமக்களும், தே.மு.தி.க.நிர்வாகிகளும், தொண்டர்களும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Similar News