செய்திகள்

காரைக்குடியில் 5 பஸ்கள் கல்வீசி உடைப்பு

Published On 2018-04-05 15:04 GMT   |   Update On 2018-04-05 17:30 GMT
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகம் முழுவதும் இன்று போராட்டம் நடைபெற்றது. காரைக்குடியில் பஸ்கள் மீது யாரோ கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

காரைக்குடி:

தமிழகம் முழுவதும் இன்று தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் பஸ் மறியல், ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காரைக்குடியிலும் இந்த போராட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர்.

இந்த நிலையில் காரைக்குடி-ராமேசுவரம் மற்றும் தேவகோட்டை-மதுரை சென்ற பஸ்கள் உள்பட 5 பஸ்கள் மீது யாரோ கல் வீசினர். இதில் அந்த பஸ்களின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன.

Tags:    

Similar News